தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கப்போகும் கிராம உத்தியோகத்தர்கள்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
அதன்படி, பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய இரு தினங்களில் பணிக்கு சமூகமளிக்காமல் இருக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்தார்.
எரிபொருளுக்கு நிகரான கொடுப்பனவு
கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

2024ஆம் ஆண்டில், குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீற்றர் எரிபொருளுக்கு நிகரான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது.
இருப்பினும், இதுவரை அக்கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) சுகயீன விடுமுறை அறிவித்து பணிக்குச் சமூகமளிக்காது தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |