இறுதிவரை போராடிய இலங்கை - 2 ஓட்டங்களால் வென்றது இந்தியா
புதிய இணைப்பு
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
163 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 பந்துப் பரிமாற்றங்களில் 160 ஓட்டங்களை எடுத்து தோல்வியை தழுவியது.
முதலாவது போட்டி
இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இலங்கை துடுப்பாட்ட அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இதில் இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி இன்று தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
இரவு 7 மணிக்கு ஆரம்பமான ஆட்டத்தில் வென்ற இலங்கை களத்தடுப்பை தேர்வு செய்தது .
இந்திய அணி
#TeamIndia post 162/5 on the board!
— BCCI (@BCCI) January 3, 2023
4⃣1⃣* for Deepak Hooda
3⃣7⃣ for Ishan Kishan
3⃣1⃣* for Akshar Patel
Over to our bowlers now ? ?
Sri Lanka innings underway.
Scorecard ▶️ https://t.co/uth38CaxaP #INDvSL pic.twitter.com/9yrF802Khi
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இலங்கைக்கு 163 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.
குறித்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக அக்சர் – ஹூடா ஜோடி அதிரடியாக விளையாடி சிறப்பான ஓட்ட எண்ணிக்கையை குவித்தனர்.
20 பந்துபரிமாற்ற முடிவில் 5 ஆட்ட இழப்பிற்கு இந்திய அணி 162 ஓட்டங்களை எடுத்துள்ளது.
இலங்கை அணி

இந்திய அணி சார்பில் ஹூடா 41, இஷான் கிஷான் 37, அக்சர் 31 ஓட்டங்களை அதிகப்படியாக எடுத்துள்ளனர் .
வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 11 பந்து பரிமாற்ற நிறைவில் 68 ஓட்டங்களுக்கு 5 ஆட்டமிழப்பை சந்தித்துள்ளது.
தற்போது விளையாடும் இலங்கை அணியை குறைத்து எடைபோட வேண்டாம் என எச்சரித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
இந்த கருத்து பாண்டியாவின் தலைமைத்துவத்திற்கு சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.