கையூட்டல் ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர்
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
காணி ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்காக இன்று (18) ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகியுள்ளார்.
விசாரணை தொடர்பான ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்களை வழங்குவதற்கு ஹரின் பெர்னாண்டோ சுமார் மூன்று மணி நேரம் செலவிட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவில் முன்னிலை
ஆணைக்குழுவில் முன்னிலையானதன் பின்னர் இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் காணி அமைச்சராக இருப்பதற்கு முன்பு தொடங்கப்பட்ட காணி ஒப்பந்தம் குறித்த எனக்கு தெரிந்த தகவல்களை அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.
காணி ஒப்பந்தம்
அதைப் பற்றி எனக்குத் தெரிந்ததை நான் அவர்களிடம் சொன்னேன்.
இது 2021 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தீர்மானமாகும்.
விசாரணைக்குரிய காணி ஒப்பந்தம் முன்னாள் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் பதவி காலத்தில் உருவானது என நம்பப்படுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

