ஹரின் பெர்னாண்டோவை கைது செய்ய முயற்சியா ? வெளியானது தகவல்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டை மறுத்த சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர, பெர்னாண்டோவை கைது செய்வது குறித்து அரசாங்கம் ஒருபோதும் கலந்துரையாடவில்லை எனத் தெரிவித்தார்.
ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அமரவீர, எந்தவொரு நபரையும் கைது செய்ய அரசாங்கம் தலையிடாது என்றும், சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தால் அவர் கைது செய்யப்படுவார் என்றும் கூறினார்.
"ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் என்பது போர் இல்லாத நிலையில் இந்த நாட்டில் நடந்த பயங்கரமான பயங்கரவாத தாக்குதல் ஆகும். பல கத்தோலிக்க பக்தர்களின் உயிர்கள் ஒரு நொடியில் இழந்தன. இது தொடர்பாக அவர்களது குடும்பங்களும் பொதுமக்களும் மிகுந்த வேதனையில் உள்ளனர். சோகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும், ”என்றார்.
பெர்னாண்டோவின் விடயத்தை யாராலும் இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், தாக்குதல் குறித்து மற்றவர்களுக்குத் தெரியாத எதையும் பெர்னாண்டோ அறிந்திருந்தால், அதை பொறுப்பான அதிகாரிகளிடம் வெளிப்படுத்துவது அவரது கடமை என்றும் கூறினார்.
அரசாங்கம் எதிர்க்கட்சியை அடக்குவதாகவும், பெர்னாண்டோவை கைது செய்ய முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு இடங்களில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கிறார், "எதிர்க்கட்சித் தலைவர் பெர்னாண்டோவுடன் சிறைக்குச் செல்லத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
அதாவது அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றால், அவர்களுக்கு பயப்பட ஒன்றுமில்லை.
ஆனால் பெர்னாண்டோவை கைது செய்வது குறித்து அரசாங்கம் ஒருபோதும் கலந்துரையாடவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், ”என்று அவர் மேலும் தெரிவித்தார்.