ஹரிணிக்கு கல்வி முறை பற்றி என்ன தெரியும்! சாடும் திலித்
இலங்கையின் கல்வி முறைப்பற்றி பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதுவும் தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
விசேட கூட்டமொன்னிறல் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கல்வி முறை மாற்ற
''கல்வி முறை மாற்றம் தொடர்பில் ஆசிரியர் சங்கத்திடம் கதைக்கவில்லை, அதிபர் சங்கங்களிடம் கதைக்கவில்லை.
சாதாரண நிகழ்நிலை கலந்துரையாடலுடன் இந்த திட்டங்கள் ஹரிணியதல் முன்னெடுக்கப்படுகின்றன. எமது காலத்தில் பாட நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே.
தற்போது 40 நிமிடங்கள் பாடவேளைகள் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் எதிர்வரும் காலங்களில் அவை 50 நிமிடங்களாக மாற்றப்படவுள்ளன. யாரிடமாவது கேட்டார்களா? இது ஐ.எம்.எப்பிடம் கேட்டு எடுக்கப்பட்ட முடிவு.
தற்போது பாடசாலைகளில் இருக்கும் கதிரைகள் பற்றி தெரியுமல்லவா. அனைத்தும் பலகை கதிரைகள். சிலவேலைகளில் பாடவேலைகள் பாடசாலைக்கு வெளியே இடம்பெறுகிறன.
வியர்வையுடன் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவ்வாறான பின்னணியில் யாரிடமும் கேட்காமல் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்ன? ” என தெரிவித்துள்ளார்.
