அநுர அரசின் முடிவின் ஆரம்பம்...! ஹரின் பெர்னாண்டோ கடும் எச்சரிக்கை
அநுரகுமார திஸாநாயக்கவின் 'முடிவின் ஆரம்பமாக' அது இருக்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ஹரின் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்
ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் அரசியல் பழிவாங்கல்கள் குறித்து சர்வதேச சமூகத்திற்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச நிறுவனங்களுக்கும் முறைப்பாடு
அத்துடன் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அநீதியான பழிவாங்கல்கள் குறித்து சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் (IPU), ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற ஒன்றியம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச நிறுவனங்களுக்கும் முறைப்பாடு அளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் தூதரக மட்டத்தில் தனித்தனியாகத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மார்ச் முதலாம் திகதிக்குப் பின்னர், மாவட்ட ரீதியாக மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் இளைஞர் குழுக்களுக்கு இந்த அநீதியான பழிவாங்கல்கள் குறித்து தெளிவுபடுத்தும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாடு இக்கட்டான நிலையிலிருந்தபோது அதனை மீட்டெடுத்த ரணில் விக்ரமசிங்க செய்த பணிகளை, தற்போதைய அரசாங்கம் தங்களுடையது போலக் காட்டி வருவதாகச் சாடிய ஹரின் பெர்னாண்டோ, அரசாங்கம் ஆட்சி செய்வதற்குப் பதிலாகப் பழிவாங்குவதில் கவனம் செலுத்துவதாகவும் விமர்சித்தார்.
முடிவின் ஆரம்பமாக இருக்கலாம்
அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் வேகமாக நகர்ந்து வருவதாகவும், அதிகாரிகள் எப்போதும் அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட மாட்டார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

இது அநுரகுமார திஸாநாயக்கவின் 'முடிவின் ஆரம்பமாக' இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த தலைமுறை ஈழத்தமிழர்களின் பலத்தை சிங்கள தேசத்திற்கு படம்போட்டுக்காட்டிய நாமலின் பிரித்தானிய பயணம்!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |