ஹட்டன் ஓயாவில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம்!
ஹட்டன் ஓயாவில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 09.00 மணியளவில் இந்த சடலம் மீட்கப்பட்டதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவத்தனர்.
இது தொடர்பில் மேலம் தெரியவருகையில்,
ஹட்டன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹட்டன் ஸ்டிதரன் தோட்டம் புருட்ஹில் பிரிவில் உள்ள மகாவலி கங்கைக்கு நீர்வழங்கும் கிளை ஆறான ஹட்டன் ஓயாவில் பெண்ணின் சடலம் ஒன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் ஹட்டன் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஆற்றில் வீசினார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சுமார் 50ற்கும் 60ற்கும் இடையிலான வயது மதிக்கதக்க பெண் எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.