இலங்கையின் சுகாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது! திட்டவட்டமாக அறிவித்த அமைச்சர்
கொரோனா பேரழிவைக் கட்டுப்படுத்தசிறிலங்காவில் வலுவான சுகாதாரப் பாதுகாப்பு உள்ளது - ஜெனிவாவில் கெஹெலிய சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் கொரோனா பேரழிவைக் கட்டுப்படுத்த வலுவான ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுநோயைத் தாண்டி உலகில் சுகாதார அமைப்புகளில் பின்னடைவை உருவாக்குவதற்கான நிலை தொடர்பான அறிக்கையை ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் உலக சுகாதார அமைப்பின் (WHO) வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட வேலைத்திட்டம் மற்றும் சமூக மட்டத்தில் இருந்து உயர் மட்டத்திற்கு சுகாதார சேவை அதிகாரிகளின் பங்களிப்பு மிகவும் உதவியாக இருந்தது.
இலங்கையானது நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்தாலும், நமது நாடு சுகாதார குறிகாட்டிகளில் அதிக செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதுடன், அதை உலகின் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடக் கூடியதாக இருக்கிறது.
கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வரும் நேரத்தில் சிகிச்சை வசதிகளின் திறனை அதிகரிக்க இடைநிலை சிகிச்சை மையங்கள் மற்றும் அடுத்தடுத்த வீட்டு சிகிச்சை திட்டங்களை நடைமுறைப்படுத்தியதனால், கொரோனா நிர்வாகத்திற்கு வெற்றியை அளித்துள்ளது.
இந்த நிலையில், மருத்துவமனைகளில் தேவையற்ற நெரிசலைத் தவிர்ப்பதற்காக 85,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.