நீதிமன்றை விட்டு வெளியேறிய ரணில்! விடுக்கப்பட்ட உத்தரவு
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் நிகழ்வில், அரசு பணத்தை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு ஒத்திவைப்பை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தை விட்டு வெளியேறி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் நிகழ்வில், அரசு பணத்தை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பிலான விசாரணை தொடர்பில் அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஒகஸ்ட் 22 முதல் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ஆனால் அவரது மருத்துவ நிலையை கருத்தில் கொண்டு, சிறைச்சாலை மருத்துவமனையின் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பான வழக்கு ஒகஸ்ட் 26 அன்று திரும்பப் பெறப்பட்டபோது, அவர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும் ஸ்கைப் மூலம் வழக்கு நடவடிக்கைகளில் இணைந்ததோடு, , அன்றைய தினம் அவருக்கு பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தொடர்பான வழக்கு, இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள 'வோல்வர்ஹாம்டன்' என்ற தனியார் பல்கலைக்கழகத்தில் மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ஒன்றரை நாட்களுக்குள் 1.5 கோடி ரூபாய்க்கு மேல் அரசு பணத்தை வீணடித்து அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர அவர்களின் உத்தரவின் பேரில், கடந்த ஓகஸ்ட் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
அத்துடன், அது தொடர்பான வழக்கு ஓகஸ்ட் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதித் தரப்பினரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதியை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இதனிடையே ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையான இரவு நீதிமன்ற அறையில் நடந்த நிகழ்வுகளை காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பிய நபர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு சிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 7 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்