அரசின் கதை முடிந்துவிடும்.....! கடுந்தொனியில் எச்சரிக்கும் நாமல் ராஜபக்ச
இந்த அரசின் கதை முடிந்துவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) எச்சரித்துள்ளார்.
பாதாள உலகக் குழுக்களுக்கு முடிவு கட்டும் போர்வையில் மற்றொரு குழுவை வளர்ப்பதற்கு முற்பட்டால் இது நடக்கும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலகக் குழுக்களுக்கு முற்றுபுள்ளி
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "பாதாள உலகக் குழுக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது. எனினும், இதற்குரிய நடவடிக்கை என்ற போர்வையில் மற்றுமொரு குழுவைக் கட்டியெழுப்ப முற்பட்டால் இந்த நடவடிக்கை வெற்றியளிக்காது.

மற்றுமொரு குழுவை உருவாக்குவதற்கு அரசு முற்படுகின்றது என்பதையே அதன் செயற்பாடு வெளிப்படுத்துகின்றது.
அவ்வாறு நடந்தால் அரசும் முடிந்துவிடும். எனவே, பாதாள உலகக் குழுக்களுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
தமது பொறுப்பை மறந்து இந்த அரசு செயற்பட்டு வருகின்றது. இதற்குரிய பதிலடி அடுத்த தேர்தலில் வழங்கப்படும்" என்றார்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 7 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்