நிறுத்தப்படும் அபாயத்தில் இதய அறுவைச்சிகிச்சைகள்
தேவையான அறுவை சிகிச்சைப் பொருட்கள் இல்லாத காரணத்தால் கொழும்பு தேசிய மருத்துவமனையில்(colombo national hospital) பைபாஸ் இதய அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் வட்டாரங்கள் தெரிவித்தன.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் 6 முதல் 10 வரையான பைபாஸ் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்றும், ஒரு நோயாளி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய சுமார் 2 ஆண்டுகள் பட்டியலில் காத்திருப்பதாகவும் தெரியவருகிறது.
வைத்திய நிபுணர் மகேஷி விஜேரத்ன கைதால் ஏற்பட்ட தயக்கம்
பல ஆண்டுகளாக, நோயாளிகள் மருத்துவ பரிந்துரையின் பேரில் சுமார் ரூ. 70,000 செலவில் பைபாஸ் அறுவை சிகிச்சைக்குத் தேவையான சில அறுவை சிகிச்சைப் பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வருவதாகவும், வைத்திய நிபுணர் மகேஷி விஜேரத்ன சம்பந்தப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, அறுவை சிகிச்சைப் பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வர மருத்துவர்கள் தயக்கம் காட்டுவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் விளைவாக, எதிர்காலத்தில் நோயாளிகள் இந்த அறுவை சிகிச்சைப் பொருட்களின் உயிருக்கு ஆபத்தான பற்றாக்குறையை சந்திக்க நேரிடும், மேலும் இந்தப் பற்றாக்குறைக்கு தீர்வு காண சுகாதாரச் செயலாளர் அனில் ஜாசிங்கவுடன் கலந்துரையாட நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
