ரோல்ஸ் ராய்ஸ் தொடர்பாக ஜி.எல் - டட்லிக்கு இடையே காரசாரமான வாக்குவாதம்
சமீபத்தில் நடைபெற்ற இத்தாலிய தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுக்கும் பிரபல தொழிலதிபர் டட்லி சிறிசேனாவுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2ஆம் திகதி சர்வதேச நிகழ்ச்சி ஒன்றில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த மோதல் கைகலப்பாக மாறுவதைத் தடுக்க மற்ற விருந்தினர்கள் தலையிட வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்
இலங்கை சந்தித்துவரும் பொருளாதார நெருக்கடி குறித்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையே இந்த பதற்றமான சூழ்நிலைக்கு முக்கிய காரணமாகும் என தென்னிலங்கை ஊடகம் ஒன்ற தனது செய்தியில் விளக்கியுள்ளது.

இது குறித்து செய்தியில் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது,
டட்லி சிறிசேனவால் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார், நாட்டின் வரிச்சுமை அதிகரிப்பதற்கும் டொலரின் மதிப்பு உயர்வதற்கும் ஒரு காரணம் என்று பேராசிரியர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த அறிக்கையால் மிகவும் கோபமடைந்த தொழிலதிபர் டட்லி சிறிசேன, விழாவிலேயே பேராசிரியரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது இந்த வார்த்தைப் போர் தொடங்கியது.
மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய டட்லி சிறிசேன, தனது கார் எந்தவொரு சட்டவிரோத பரிவர்த்தனைகள், தரகு அல்லது சுங்க வரிகள் மூலமாக இறக்குமதி செய்யப்படவில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.
வணிக நடவடிக்கை
தனது வணிக நடவடிக்கைகள் மூலம் இரவும் பகலும் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி, கேள்விக்குரிய காரை சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்ததாக அவர் கூறியுள்ளார்.
சிறுவயது முதல் பள்ளிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் சென்று வந்த, உணவு கொண்டு செல்லவும் அவற்றைப் பயன்படுத்திய பேராசிரியர் மற்றும் பிறருக்கு மட்டுமே அத்தகைய வாகனங்களைப் பயன்படுத்த உரிமை உள்ளதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த தன்னைப்போன்ற ஒருவர், கடின உழைப்பின் மூலம் வெற்றி பெற்று அத்தகைய வாகனத்தை வாங்கியபோது, சிலர் மிகவும் பொறாமைப்பட்டு, அதைப் பார்ப்பதற்குச் சிரமப்பட்டனர் என்றும் மேலும் கூறினார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்…. 5 மணி நேரம் முன்