தொடரும் மழை : கடுமையாக உயரப்போகும் மரக்கறி விலைகள்
இலங்கை முழுவதும் பெய்து வரும் கனமழையால் சுமார் 600,000 ஏக்கர் நெல் மற்றும் மரக்கறி பயிர்கள் நாசமாகியுள்ளன, இது பண்டிகைக் காலத்தில் மரக்கறி பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாக தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னக்கோன் எச்சரித்தார்.
இது தெடார்பில் கொழும்பு ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த தென்னக்கோன், கிழக்கு மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நெல் மற்றும் பிற உணவுப் பயிர்கள் மோசமாக சேதமடைந்துள்ளதாகவும், நுவரெலியா மற்றும் பதுளையில் காய்கறி பயிர்களும் குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் கூறினார்.
கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான மாவட்ட அளவிலான புள்ளிவிவரங்களை அவர் வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு: 25,500 ஹெக்டேர்
அம்பாறை: 33,000 ஹெக்டேர்
திருகோணமலை: 23,000 ஹெக்டேர்
குருநாகல்: 15,000 ஹெக்டேர்
அனுராதபுரம்: 4,000 ஹெக்டேர்
பொலன்னறுவை: 5,000 ஹெக்டேர்
மொனராகலை: 55,000 ஹெக்டேர்
காய்கறிகளின் சேதம்
நுவரெலியா: 18,000 ஹெக்டேர்
பதுளை: 9,000 ஹெக்டேர்
மீட்பு நடவடிக்கைகள் விரைவாக செயற்படுத்தப்படாவிட்டால், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் பயிர் அழிவு குறிப்பிடத்தக்க விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று தென்னக்கோன் எச்சரித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |