ஆதித்யா-எல்1 விண்கலம் : இஸ்ரோ வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு
சூரியனை ஆய்வு செய்ய 'லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலம் சூரிய அனலில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல் முறையாக படமெடுத்து அனுப்பியுள்ளது.
கடந்த 29ம் திகதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. ஆதித்யா-எல்1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி உயர் ஆற்றல் கொண்ட சூரிய கதிர்களை படமெடுத்து அனுப்பியுள்ளது.
விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள
உயர் ஆற்றல் சூரிய கதிர்கள் குறித்து ஆதித்யா-எல்1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஹெச்இஎல்10எஸ் கருவி நன்றாக ஆய்வு செய்துவருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Aditya-L1 Mission:
— ISRO (@isro) November 7, 2023
HEL1OS captures first High-Energy X-ray glimpse of Solar Flares
?During its first observation period from approximately 12:00 to 22:00 UT on October 29, 2023, the High Energy L1 Orbiting X-ray Spectrometer (HEL1OS) on board Aditya-L1 has recorded the… pic.twitter.com/X6R9zhdwM5
ஆய்வு செய்ய உதவும்
ஆதித்யா-எல்1 விண்கலம் அனுப்பிய தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வு செய்ய உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்