இந்திய கடற்படை ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியது : விமானி ஸ்தலத்தில் பலி
இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று ஓடுபாதையிலேயே விழுந்து நொருங்கியதில் விமானி ஸ்தலத்திலேயே பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் மாலுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இந்திய கடற்படைத்தளத்திலேயே இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வழக்கமான ரோந்துப் பணிக்காக
இன்று மதியம் இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ' சீட்டாக்' என்ற ஹெலிகொப்டர் வழக்கமான ரோந்துப் பணிக்காக பறப்பில் ஈடுபடுவதற்காக ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட வேளை, சில நொடிகளிலேயே மீண்டும் ஓடு பாதையில் வேகமாக விழுந்ததாக கூறப்படுகிறது.

கோர விபத்தில்
இதில் ஹெலிகொப்டர் நொருங்கியதாக தெரிகிறது. இந்த கோர விபத்தில் விமானி உயிரிழந்ததாகவும், மாலுமி படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்த மாலுமி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இந்திய கடற்படை உத்தரவிட்டுள்ளது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 2 மணி நேரம் முன்