சஷீந்திர ராஜபக்சவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த மேல் நீதிமன்றம்
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச தாக்கல் செய்த சீராய்வு மனுவை, அவர் மீளப் பெற்றதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
இந்த மனு இன்று (02) நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெந்திஸ், தனது கட்சிக்காரர் மனுவை மீளப் பெற அறிவுறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்து, மனுவை மீளப் பெற அனுமதி கோரினார்.
தள்ளுபடி செய்ய உத்தரவு
இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, சீராய்வு மனுவை மீளப் பெற அனுமதித்து, அதை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.
இதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்சவை எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
