சிறிலங்காவின் வரலாற்று சிறப்பு மிக்க இடம் தொடர்பில் ரணில் பிறப்பித்த உடனடி உத்தரவு!
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரை முழுமையாக அபிவிருத்தியடைந்த நகரமாக மாற்றுவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும் கட்டுகஸ்தோட்டைக்கு செல்லும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுகஸ்தோட்டை, கண்டி மற்றும் குண்டகசாலையை மையமாகக் கொண்டு விசேட அபிவிருத்தித் திட்டத்தை தயாரிப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை, கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழு, மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர்கள் மற்றும் நகர திட்டமிடல் துறையில் அறிஞர்கள் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்தக் குழு கூடி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வீதி வீதியாக நடத்தப்பட்ட “குடியரசு பெரஹரா” நிறைவடைந்ததை அடுத்து நேற்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இது தொடர்பான செய்தியையும் மேலும் பல வெிரிவான செய்திகளையும் அறிந்துகொள்ள காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
