ரணிலை பிரதமராக்க எழுதப்பட்ட திரைக்கதை
இலங்கை தற்போது மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் போன்று உள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன் கூறியுள்ளார்.
எமது ஊடகத்தின் “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துகளைப் பகிர்ந்த போது இதனைக் கூறினார். இதன்போது மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர்,
மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலிலிருந்து எப்போதும் எலிகள் தப்பியோடும். அதனால் தான் எதிர்க்கட்சிகள் அரச தலைவரின் இடைக்கால ஏற்பாட்டுக்க பின்னடித்தன.
இடைக்கால ஏற்பாட்டுக்குச் சென்றால் தோல்வியை தழுவ வேண்டியிருக்கும் என அவர்கள் எண்ணினார்கள். ஆன படியினாலேயே எதிர்க்கட்சிகள் தயங்கின.
இந்த சூழ்நிலையில் யாராவது ஒருவர் பதவியை பொறுப்பேற்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியவுடன் புதிய அமைச்சரவையை உருவாக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது.
பகுதி -1
இந்த நிலையில் அரசியல் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஓய்வு நிலையில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் தான் இத்தகைய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் நிலைமை இருக்கிறது.
ஈழப் போரானது இலங்கையின் பாரம்பரிய இரு கட்சிகளையும் சிதைத்துவிட்டது. (ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி) அத்தோடு, இலங்கை நாடாளுமன்றத்தையும் சிதைத்து விட்டது. இன்றைய நாடாளுமன்றம் ஒரு கோமாளிக் கூத்தாடும் களமாக இருக்கிறது.
ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை கொண்டிருக்கும் ஒருவர் நாட்டின் பிரதமராக வந்திருக்கிறார் என்றால், இது இலங்கை அரசியல் நிலைமையை தான் காட்டுகிறது.
ரணில் ஒரு வலிய சீவன். அவர் எல்லா நிலைகளையும் சமாளிக்க வல்லவர். அவரது வயதை வைத்துப் பார்க்கும் பொழுது இதுவே அவரது கடைசி ஆட்டமாகக் கூட இருக்கலாம்.
மேற்கு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் விருப்பமானவர் அவர். தேசியப்பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் பிரவேசித்து நாடாளுமன்றத்தில் முதல் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் எடுத்துரைத்திருந்தார்” என்றார்.
பகுதி -2