மருத்துவமனைகளில் பரிசோதனைகள் நிறுத்தப்படும் அபாயம்!
மருத்துவமனைகளில் பயிற்சி பெற்ற வைத்திய நிபுணர்களின் கடுமையான பற்றாக்குறையால் பல மருத்துவமனைகளில் CT, MR, I மற்றும் PET ஸ்கான் பரிசோதனை சேவைகள், இதய வடிகுழாய் பரிசோதனை அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் கதிர்வீச்சு பரிசோதனை சேவைகள் நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக அரசு அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறை மற்றும் வெளிநாடுகளுக்கு வெளியேறியமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
பரிசோதனைகள் நிறுத்தப்படும்
மேலும், கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை, கராப்பிட்டி, அனுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, இரத்தினபுரி, பதுளை கேகாலை மற்றும் பொலனறுவை ஆகிய வைத்தியசாலைகளில் பரிசோதனைகள் நிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
