வாழ்வா - சாவா பிரச்சினையில் வெனிசுவெலா! உதவி கேட்டு அலறிய மக்கள்
வெனிசுவெலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தையும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்த பேரிடரில் சிக்கியவர்கள் தாங்கள் எதிர்கொண்ட கொடூரமான அனுபவங்களை சர்வதேச ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ரூயிஸ் கார்சியா என்ற பெண், முதல் அதிர்வுகளையும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான குலுக்கலையும் உணர்வதற்கு சில நொடிகள் முன்பே கூகுள் நிலநடுக்க எச்சரிக்கை கிடைத்ததாக தெரிவித்தார்.
போரால் பாதிக்கப்பட்ட காட்சி
“பொருட்கள் கீழே விழத் தொடங்கின. தன் வீட்டின் ஒரு சுவரில் விரிசல் ஏற்படுவதையும் நேரில் பார்த்தேன். அது என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் பயங்கரமான தருணங்களில் ஒன்றாகும்,” என்று அவர் விவரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தின் போது கேட்ட சத்தத்தை அவர் “விமான டர்பைன் இயங்கும் ஓசை போன்றது” என்று விவரித்துள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் ரூயிஸ் கார்சியாவும் அவரது குடும்பத்தினரும் தாங்கள் இருந்த கட்டிடத்திலிருந்து அவசரமாக வெளியேறியுள்ளனர்.
பாதுகாப்பான இடத்தை அடைந்த பின்னர், அருகிலிருந்த மற்றொரு கட்டிடம் இடிந்து விழுவதை அவர்கள் நேரில் கண்டதாக தெரிவித்துள்ளார்.
“என் பாட்டியை அழைத்து வரச் சென்றபோது, தெருவின் மறுபுறத்தில் இருந்த கட்டிடம் முழுவதுமாக இடிந்து கிடந்தது. அது போரால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டின் காட்சியைப் போல் இருந்தது.
துயரமான நாள்
சுவர்கள் சரிந்து கிடந்தன, மின்கம்பிகள் உடைந்து தொங்கின. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்கள் உதவிக்காக அலறிய குரல்களும், கட்டிடங்கள் இடியும் சத்தங்களும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தன,” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் வழியாக வெளிவரும் ஒவ்வொரு காணொளியும் நிலைமையின் தீவிரத்தை மேலும் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
“மெல்ல மெல்ல காணொளிகளும் தகவல்களும் வெளியாகின்றன. ஒவ்வொரு காட்சியும் முந்தையதை விட மோசமாக இருக்கிறது.
இன்று வெனிசுவெலாவுக்கு மிகவும் இருண்ட மற்றும் துயரமான நாளாக மாறியுள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மீட்புக் குழுக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த பேரிடர், பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் நீண்டகால உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலையில், தகவல்களைப் பெறும் திறன் விரைவில் “வாழ்வா சாவா” என்ற முக்கியமான விஷயமாக மாறக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) எச்சரித்துள்ளது.
இதனையடுத்து, ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களை அணுகுவதற்கான கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குமாறு வெனிசுலா அதிகாரிகளுக்கு ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. குழு அறிக்கை
வெனிசுலாவுக்கான ஐ.நா. உண்மை கண்டறியும் குழு வெளியிட்ட அறிக்கையில்,
The @UN Fact-Finding Mission on #Venezuela stands with Venezuelans after today's devastating #earthquakes. In these critical hours, access to information is life or death: CONATEL must immediately unblock all media and social networks.
— UN Human Rights Council Investigative Bodies (@uninvhrc) June 25, 2026
More ➡️ https://t.co/vsoICr2kHz pic.twitter.com/7NYHsMt1M2
“இந்த மாபெரும் துயரச் சம்பவத்திற்கான தேசிய மற்றும் சர்வதேச நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களிலும் மனித உரிமைகளுக்கான முழுமையான அர்ப்பணிப்பே வழிகாட்டியாக இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெனிசுலாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான CONATEL, சமூக ஊடகங்கள் மற்றும் அனைத்து ஊடக நிறுவனங்களுக்கான அணுகலை முழுமையாக மீளத் திறப்பதற்கான முதல் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் மணிநேரங்களிலும் நாட்களிலும் தகவல்களைப் பெறுவது என்பது மக்களுக்கு வாழ்வா சாவா என்ற அளவுக்கு முக்கியமானதாக இருக்கும். எனவே தகவல் தொடர்பு மீதான கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும். அதனைச் செய்யத் தவறுவதற்கு எந்தக் காரணமும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது, என ஐ.நா. தெரிவித்துள்ளது.
பேரிடர் காலங்களில் மக்களுக்கு துல்லியமான மற்றும் உடனடியான தகவல்கள் கிடைப்பது மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமானது என்றும், தகவல் சுதந்திரம் மனித உரிமைகளின் அடிப்படை அம்சமாகும் என்றும் ஐ.நா. மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அத்தோடு, வெனிசுலாவின் மீட்பு முயற்சிகளுக்காக, தனது பிரதான செயற்கைக்கோள் அடிப்படையிலான புவி கண்காணிப்பு அமைப்பான கோப்பர்நிக்கஸ் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இதில் "கோப்பர்நிக்கஸ் செயல்படுத்தப்பட்டுள்ளது, மேலும் உதவியை அதிகரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி ஆணையர் ஹட்ஜா லஹ்பிப் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தரப்பினர் வெனிசுலாவில் ஏற்கனவே கள உதவிகளை வழங்கத் தொடங்கியுள்ளனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 19 நிமிடங்கள் முன்