துப்பாக்கிச் சூட்டில் விடுதி உரிமையாளர் உயிரிழப்பு..!
மிதிகம சுற்றுலா விடுதிக்கு அருகில் இனந்தெரியாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் விடுதி உரிமையாளர் மாத்தறை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விடுதி உரிமையாளர் தனது விடுதிக்கு அருகாமையில் நேற்று மாலை 6:30 மணியளவில் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது, வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத குழுவொன்று அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படுகாயமடைந்த 31 வயதான விடுதி உரிமையாளர் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த உரிமையாளர் பசிந்து சந்தருவன் தொடம்கொட இன்று 30ஆம் திகதி அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றவர்கள் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.