ஐரோப்பாவிற்குள் நுழைய முற்பட்டோருக்கு நடந்த அவலம்!
Turkey
By pavan
துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டிற்குள் நுழைய முற்பட்ட அகதிகள் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக 40-க்கும் மேற்பட்ட அகதிகள், படகு மூலம் நுழைய பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கீரிஸ் நாட்டின் லிரொஸ் தீவுக்கூட்டம் அருகே வந்தபோது கடற்பாறைகள் மீது மோதி படகு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் கடலில் மூழ்கினர்.
பெண் உள்பட 4 பேர் உயிரிழப்பு
இந்த விபத்து குறித்து தகவலறிந்த கடலோர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், படகு விபத்துக்குள்ளான சம்பவத்தில் பெண் உள்பட 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
எஞ்சிய 37 பேர் உயிருடன் மீட்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.