ஐரோப்பாவிற்குள் நுழைய முற்பட்டோருக்கு நடந்த அவலம்!
Turkey
By pavan
துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டிற்குள் நுழைய முற்பட்ட அகதிகள் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக 40-க்கும் மேற்பட்ட அகதிகள், படகு மூலம் நுழைய பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கீரிஸ் நாட்டின் லிரொஸ் தீவுக்கூட்டம் அருகே வந்தபோது கடற்பாறைகள் மீது மோதி படகு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் கடலில் மூழ்கினர்.
பெண் உள்பட 4 பேர் உயிரிழப்பு
இந்த விபத்து குறித்து தகவலறிந்த கடலோர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், படகு விபத்துக்குள்ளான சம்பவத்தில் பெண் உள்பட 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
எஞ்சிய 37 பேர் உயிருடன் மீட்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்