யாழ் செம்மணியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள்
Sri Lankan Tamils
Tamils
Jaffna
Sri Lanka
By Shalini Balachandran
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் 18 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
யாழ் - செம்மணி , சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நேற்று (05) இரண்டாம் கட்டத்தின் நான்காம் நாள் அகழ்வுப் பணி இடம்பெற்றது.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராசா அவர்களது கண்காணிப்பின் கீழ் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி இடம்பெற்றது.
மனிதப் புதைகுழி
இதன் போது சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றுடன் 18 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நேற்று (05) ஐந்து மண்டையோட்டுத் தொகுதிகள் மீட்க்கப்பட்டுள்ளது. குறித்த மனிதப் புதைகுழி வழக்கு நாளைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் திறந்தமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி