தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்ட செம்மணி அகழ்வு பணிகள் - காலில் செருப்புடன் எலும்புக்கூடு
புதிய இணைப்பு
செம்மணியில் கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
முதலாம் இணைப்பு
செம்மணி மனிதப் புதைகுழியில் காலில் செருப்புடன் மனித என்புத் தொகுதி ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து இரண்டு கால்களிலும் செருப்பு அணிந்த நிலையிலும், இடுப்பில் கட்டும் தாயத்துடனும் மனித என்புத் தொகுதி ஒன்று நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
எலும்பு கூட்டு தொகுதிகள்
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவர்கள், சிசுக்கள் உள்ளிட்ட 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
