இழிவுபடுத்தப்படும் பௌத்த மதம் : சட்ட நடவடிக்கையை கோரும் மகாநாயக்க தேரர்கள்!

Ranil Wickremesinghe Sri Lanka Buddhism
By Eunice Ruth Jan 14, 2024 03:38 PM GMT
Report

பௌத்த மதத்தை இழிவுபடுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவை மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மல்வத்து, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமஞ்ஞ பீடம் ஆகியவற்றின் மகாநாயக்க தேரர்களே இவ்வாறு அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பௌத்த மதத்தை இழிவுப்படுத்தும் வகையிலான கருத்துக்களை பரப்பி, பௌத்த தத்துவம் மற்றும் கலாச்சார விழுமியங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குறித்த கடிதத்தின் மூலம் மகாநாயக்க தேரர்கள் கோரியுள்ளனர்.

பௌத்த மதத்துக்கு எதிரான கருத்துக்கள்

இலங்கையின் மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், பௌத்த மதம் தொடர்பான தவறான சித்தாந்தங்களைப் பரப்பும் நடவடிக்கைக்கு எதிராக கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இழிவுபடுத்தப்படும் பௌத்த மதம் : சட்ட நடவடிக்கையை கோரும் மகாநாயக்க தேரர்கள்! | Ideologies Againts Buddhism Ranil Wickremesinghe

ரணிலுக்கு ஆதரவு வழங்கத் தயார்! நிபந்தனைகளை கூறிய சம்பந்தன்

ரணிலுக்கு ஆதரவு வழங்கத் தயார்! நிபந்தனைகளை கூறிய சம்பந்தன்

இந்த நிலையில், பௌத்த தத்துவத்திற்கும் அதன் கலாச்சார விழுமியங்களுக்கும் தீங்கு விளைவிப்பதாகக் கூறும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

பௌத்த மதத்தை அழிக்க முற்படும் இவ்வாறான நபர்களின் செயற்பாடுகளை இனியும் வெறும் சம்பவங்களாகக் கருத முடியாது என மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமூக ஊடகங்கள்

மேலும், சமூக ஊடகங்களில் தவறான கருத்துக்களை பரப்பி பௌத்த சமூகத்தை தவறாக வழிநடத்தி சமூக சீர்கேடுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவற்கு தேவையான சட்டங்கள் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டுமென அவர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளனர்.

இழிவுபடுத்தப்படும் பௌத்த மதம் : சட்ட நடவடிக்கையை கோரும் மகாநாயக்க தேரர்கள்! | Ideologies Againts Buddhism Ranil Wickremesinghe

இந்தியாவுடனான மோதல்! மாலைதீவு தேர்தலில் சீன ஆதரவு கட்சி படுதோல்வி

இந்தியாவுடனான மோதல்! மாலைதீவு தேர்தலில் சீன ஆதரவு கட்சி படுதோல்வி

புத்தசாசனத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அதனை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இலங்கையில் இடம்பெற்ற பல சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு ராஜபக்சர்களே காரணமாம் : இப்படி கூறுகிறார் மகிந்த

தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு ராஜபக்சர்களே காரணமாம் : இப்படி கூறுகிறார் மகிந்த

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்