சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளுக்கு எதிராக எடுக்கவுள்ள நடவடிக்கை! மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை
உண்டியல் முறைமை போன்ற சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு காவல்துறை அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றின் மூலம் இது தொடர்பான விடயங்களை வெளியிட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று வெளிநாட்டுப் பணம் அனுப்புவதைக் குறைத்துள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் பல முறைசாரா பரிவர்த்தனை முறைகளை பயன்படுத்தி வருவதாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பணமோசடி தடுப்புச் சட்டம்
எனவே, இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின் உதவியுடன் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
அதேவேளை, இது போன்ற சட்டவிரோத பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
