நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் கைது!

Mullaitivu Fishing Nothern Province Srilankan Tamil News
By Kathirpriya Nov 03, 2023 05:22 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குளத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு கடற்தொழிலாளர்கள் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது அவர்கள் வருகை தந்த 15 மோட்டார் சைக்கிள்களும் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தண்ணிமுறிப்பு நன்னீர் கடற்தொழில் சங்கத்தினருக்கும், கிச்சிராபுரம் நன்னீர் கடற்தொழில் சங்கத்தினருக்கும் மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து இந்தியர்கள்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து இந்தியர்கள்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

சட்டவிரோத மீன்பிடி

இந்நிலையில் வெலிஓயா பகுதியிலிருந்து வருகைதரும் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக தண்ணிமுறிப்பு குளத்தில் எந்தவித அனுமதியுமின்றி அத்துமீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் இருதரப்பு கடற்றொழிலாளர்களுக்குமிடையில் தொடர்ச்சியாக முரண்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு கடந்த மே மாதம் இடம்பெற்ற பிரச்சினையின் போது கூட 37 சிங்கள கடற்தொழிலாளர்களும், 17 தமிழ் கடற்தொழிலாளர்களும் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதிகரிக்கும் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி : 37 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

அதிகரிக்கும் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி : 37 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் கைது! | Illegal Fishing In Mullaitivu Against Court Order

குறித்த வழக்கின் போது இறுதியாக நீதிமன்றத்தினால் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் இனிமேல் குறித்த குளத்திற்கு மீன்பிடிப்பதற்கு வரமாட்டோம் என தெரிவித்ததன் அடிப்படையில், அவர்களுக்கான கடற்தொழில் அனுமதியும் மறுக்கப்பட்டு தீர்ப்பளித்து விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் தற்போது நீதிமன்ற உத்தரவின் பின்னரும் தொடர்ச்சியாக பெரும்பான்மையின கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இந்த விடயங்களை நேரில் உறுதிப்படுத்தவும் வேண்டி ஊடகவியலாளர்களை குறித்த பகுதிக்கு அழைத்திருந்தனர்.

சட்ட விரோத மீன்பிடிக்கு தீர்வு: டக்ளஸ் வழங்கிய ஆலோசனை

சட்ட விரோத மீன்பிடிக்கு தீர்வு: டக்ளஸ் வழங்கிய ஆலோசனை

குற்றம் சுமத்தியுள்ளனர்

இந்நிலையில், நேற்றைய தினம் (02) அந்த பகுதிக்கு ஊடகவியலாளர்கள் அழைத்து செல்லப்பட்டபோது அங்கு சுமார் 50 க்கு மேற்ப்பட்ட பெரும்பாண்மையினத்தை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

உடனடியாக காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கங்கத்திற்கும், ஒட்டுசுட்டான் காவல்துறையினருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த காவல்துறையினரால் அங்கு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட  ஏனையவர்கள் தப்பித்து சென்ற நிலையில் அவர்களுடைய 15 மோட்டார் சைக்கிள்களை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றிருந்தனர்.

வடக்கில் பிரத்தியேகமான முதலீட்டு வலயம் அமைக்க நடவடிக்கை

வடக்கில் பிரத்தியேகமான முதலீட்டு வலயம் அமைக்க நடவடிக்கை

நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் கைது! | Illegal Fishing In Mullaitivu Against Court Order

தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் கடற்தொழிலாளர்கள் வெலிஓயா கடற்தொழிலாளர்களின் அத்துமீறல் நடவடிக்கையினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாக பல தடவைகள் அரச திணைக்களத்தினர், மற்றும் கடற்தொழில் அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கும் எடுத்துரைத்துள்ளதாகவும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக குறித்த பகுதி கடற்தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

இந்திய கடற்தொழிலாளர்களை அனுமதிக்க மாட்டோம்: கடற்தொழிலாளர்கள் சங்கம் கண்டனம்

இந்திய கடற்தொழிலாளர்களை அனுமதிக்க மாட்டோம்: கடற்தொழிலாளர்கள் சங்கம் கண்டனம்

நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் கைது! | Illegal Fishing In Mullaitivu Against Court Order

நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் கைது! | Illegal Fishing In Mullaitivu Against Court Order

நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் கைது! | Illegal Fishing In Mullaitivu Against Court Order

நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் கைது! | Illegal Fishing In Mullaitivu Against Court Order

நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் கைது! | Illegal Fishing In Mullaitivu Against Court Order

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023