நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் கைது!

Mullaitivu Fishing Nothern Province Srilankan Tamil News
By Kathirpriya Nov 03, 2023 05:22 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குளத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு கடற்தொழிலாளர்கள் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது அவர்கள் வருகை தந்த 15 மோட்டார் சைக்கிள்களும் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தண்ணிமுறிப்பு நன்னீர் கடற்தொழில் சங்கத்தினருக்கும், கிச்சிராபுரம் நன்னீர் கடற்தொழில் சங்கத்தினருக்கும் மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து இந்தியர்கள்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து இந்தியர்கள்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

சட்டவிரோத மீன்பிடி

இந்நிலையில் வெலிஓயா பகுதியிலிருந்து வருகைதரும் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக தண்ணிமுறிப்பு குளத்தில் எந்தவித அனுமதியுமின்றி அத்துமீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் இருதரப்பு கடற்றொழிலாளர்களுக்குமிடையில் தொடர்ச்சியாக முரண்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு கடந்த மே மாதம் இடம்பெற்ற பிரச்சினையின் போது கூட 37 சிங்கள கடற்தொழிலாளர்களும், 17 தமிழ் கடற்தொழிலாளர்களும் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதிகரிக்கும் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி : 37 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

அதிகரிக்கும் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி : 37 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் கைது! | Illegal Fishing In Mullaitivu Against Court Order

குறித்த வழக்கின் போது இறுதியாக நீதிமன்றத்தினால் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் இனிமேல் குறித்த குளத்திற்கு மீன்பிடிப்பதற்கு வரமாட்டோம் என தெரிவித்ததன் அடிப்படையில், அவர்களுக்கான கடற்தொழில் அனுமதியும் மறுக்கப்பட்டு தீர்ப்பளித்து விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் தற்போது நீதிமன்ற உத்தரவின் பின்னரும் தொடர்ச்சியாக பெரும்பான்மையின கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இந்த விடயங்களை நேரில் உறுதிப்படுத்தவும் வேண்டி ஊடகவியலாளர்களை குறித்த பகுதிக்கு அழைத்திருந்தனர்.

சட்ட விரோத மீன்பிடிக்கு தீர்வு: டக்ளஸ் வழங்கிய ஆலோசனை

சட்ட விரோத மீன்பிடிக்கு தீர்வு: டக்ளஸ் வழங்கிய ஆலோசனை

குற்றம் சுமத்தியுள்ளனர்

இந்நிலையில், நேற்றைய தினம் (02) அந்த பகுதிக்கு ஊடகவியலாளர்கள் அழைத்து செல்லப்பட்டபோது அங்கு சுமார் 50 க்கு மேற்ப்பட்ட பெரும்பாண்மையினத்தை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

உடனடியாக காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கங்கத்திற்கும், ஒட்டுசுட்டான் காவல்துறையினருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த காவல்துறையினரால் அங்கு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட  ஏனையவர்கள் தப்பித்து சென்ற நிலையில் அவர்களுடைய 15 மோட்டார் சைக்கிள்களை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றிருந்தனர்.

வடக்கில் பிரத்தியேகமான முதலீட்டு வலயம் அமைக்க நடவடிக்கை

வடக்கில் பிரத்தியேகமான முதலீட்டு வலயம் அமைக்க நடவடிக்கை

நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் கைது! | Illegal Fishing In Mullaitivu Against Court Order

தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் கடற்தொழிலாளர்கள் வெலிஓயா கடற்தொழிலாளர்களின் அத்துமீறல் நடவடிக்கையினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாக பல தடவைகள் அரச திணைக்களத்தினர், மற்றும் கடற்தொழில் அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கும் எடுத்துரைத்துள்ளதாகவும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக குறித்த பகுதி கடற்தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

இந்திய கடற்தொழிலாளர்களை அனுமதிக்க மாட்டோம்: கடற்தொழிலாளர்கள் சங்கம் கண்டனம்

இந்திய கடற்தொழிலாளர்களை அனுமதிக்க மாட்டோம்: கடற்தொழிலாளர்கள் சங்கம் கண்டனம்

நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் கைது! | Illegal Fishing In Mullaitivu Against Court Order

நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் கைது! | Illegal Fishing In Mullaitivu Against Court Order

நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் கைது! | Illegal Fishing In Mullaitivu Against Court Order

நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் கைது! | Illegal Fishing In Mullaitivu Against Court Order

நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் கைது! | Illegal Fishing In Mullaitivu Against Court Order

ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், கொழும்பு, London, United Kingdom

17 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், திருகோணமலை

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015