இந்தியாவிலிருந்து தலைமன்னாருக்கு படகில் வந்தவர்கள் கைது!
இந்தியாவில் இருந்து (India) சட்ட விரோதமான முறையில் படகில் தலைமன்னார் (Talaimannar) பகுதிக்கு வருகை தந்த குற்றத்தில் இலங்கையைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் இன்று (3) தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கடற்படையினரால் (Sri Lanka Navy) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், கைது செய்யப்பட்ட குறித்த 5 நபர்கள் கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் (Mannar) தாழ்வுபாடு, தலைமன்னார், வவுனியா (Vavuniya), கிளிநொச்சி (Kilinochchi) ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37,39,24,26 மற்றும் 38 வயதுடைய ஆண்கள் என தெரிய வந்துள்ளது.
குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கைது செய்யப்பட்ட குறித்த 5 சந்தேக நபர்கள் தற்போது தலைமன்னார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு, விசாரணைகளின் பின்னர் அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 3 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)