சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா...!
சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும், அமெரிக்கா(us) இரண்டாவது இடத்திலும், ஜெர்மனி (germany)மூன்றாவது இடத்திலும் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பட்டியலில் ஏமன் கடைசி இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத வர்த்தகத்திற்கு எதிரான சர்வதேச கூட்டணி சமீபத்தில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்தியா இலங்கைமற்றும் வங்கதேசம்
சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை எதிர்கொள்ள அதிக திறன் கொண்ட நாடுகளின் தரவரிசையில் இந்தியா (india)(52), இலங்கை (sri lanka)(73), மற்றும் வங்கதேசம் ((bangladesh)95) ஆகியவை முதல் சதவீதத்தில் சேர முடிந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்(pakistan) 101வது இடத்தைப் பிடித்துள்ளதாகவும், அந்த நாடுகள் இந்தச் சவால்களைச் சமாளிப்பதில் மிகவும் வெற்றிகரமான தெற்காசிய நாடுகளாக உருவெடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் வருடாந்த வருமான இழப்பு
இந்த சூழ்நிலையால் பாகிஸ்தான் ஆண்டுக்கு 751 பில்லியன் ரூபாய் வருவாயை இழந்து வருவதாகவும், சட்டவிரோத புகையிலை வர்த்தகத்தால் இதில் 300 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் செய்தி நிறுவனமான 'தி நியூஸ் இன்டர்நேஷனல்' தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையை சமாளிக்க, சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுக்க எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், உள்நாட்டு வர்த்தகத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
