மின்சார திருத்தம் விரைவில்! IMFக்கு வழங்கப்பட்ட உறுதி
மின்சார விலை திருத்தம் குறித்த சமர்ப்பிப்புகளை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) இலங்கை மின்சார சபை (CEB) ஏன் சமர்ப்பிக்கத் தவறியது என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) கேள்வி எழுப்பியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 14, 2025 க்குள் அதன் கட்டண திருத்த முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு PUCSL CEB-க்கு அறிவுறுத்தியிருந்தது.
இருப்பினும், CEB டிசம்பர் 29 அன்றுதான் அதைச் சமர்ப்பித்தது - காலக்கெடுவைத் தாண்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
சமர்ப்பிப்பில் பிழைகள்
மேலும் சமர்ப்பிப்பில் பிழைகள் மற்றும் குறைபாடுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக ஜனவரி 8, 2026 க்குள் திருத்தங்களைச் செய்யுமாறு PUCSL கேட்டது. ஆனால் CEB திருத்தப்பட்ட, முழுமையான திட்டத்தை சரியான நேரத்தில் வழங்க முடியவில்லை என கூறப்படுகிறது.
இதன் விளைவாக, CEB இந்த முறை கட்டண திருத்தத்தை செயல்படுத்த முடியவில்லை.
IMF திட்டத்தின் அடிப்படையில் CEB எப்போதும் செலவு பிரதிபலிப்பு விலை நிர்ணயத்தை செயல்படுத்த வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு
இதன்படி ஜனவரி 22 முதல் 28 வரை கொழும்புக்கு விஜயம் செய்த இவான் பாபகேர்ஜியோ (Evan Papageorgiou ) தலைமையிலான சர்வதேச நாணய நிதியக் குழு, டிட்வா சூறாவளியின் தாக்கம் குறித்து விவாதித்தது.

இதன்போதே EB சரியான நேரத்தில் திட்டங்களை சமர்ப்பிக்கத் தவறியது குறித்து சர்வதேச நாணய நிதியம் விசாரித்ததாக தெரிவித்தார்.
இந்த முறை அடுத்த சமர்ப்பிப்பு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் செய்யப்படும் என்று சர்வதேச நாணய நிதியக் குழுவிற்கு உறுதியளிக்கப்பட்டது.
ஜனவரி 2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சார கட்டணங்களை 11.57 சதவீதம் திருத்தம் செய்யுமாறு CEB கோரியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
4 நாட்கள் முன்