ஐ.எம்.எப் இன் நிதியைப் பெற இலங்கைக்கு ஆதரவளிக்கும் முக்கிய ஐரோப்பிய நாடு!
இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியைப் பெறுவதற்கு மற்றுமொரு ஐரோப்பிய நாடு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், இலங்கை விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதியைப் பெறுவதற்கு, அவசியமான நிதி உத்தரவாதங்களை பரிசீலனை செய்யத் தயார் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பெரிஸ் கிளப்பில் அங்கத்துவம் வகிக்கும் முக்கியமான நாடு என்ற வகையில் பிரித்தானியா தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றில்
குறித்த விடயம் தொடர்பாக பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் ஆன்-மெரி ட்ரெவெல்யன் அந் நாட்டின் நாடாளுமன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெரிஸ் கிளப் மற்றும் பெரிஸ் கிளப் அல்லாத கடன் வழங்குநர்களுக்கு இடையிலான முன்மொழியப்பட்ட ஒருங்கிணைப்பு திட்டத்திற்கு பிரித்தானியா முழு ஆதரவளிப்பதாகவும், இது இலங்கையில் கடன் நிலைத் தன்மையை சரி செய்வதற்கு சிறந்த வலி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.