பதவி பறிபோகவுள்ள இரட்டை குடியுரிமை எம்.பிக்கள் - சபாநாயகர் அதிரடி நடவடிக்கை
சபாநாயகரின் ஆட்டம் ஆரம்பம்
22ஆவது அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை குடிவரவுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி கடந்த சில நாட்களாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் இது தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
225 பேரில் ஒருவர் கண்டு பிடிப்பு
இந்த விசாரணையில், தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்தவர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அடையாளம் காட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை இரட்டை குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டறியும் வேலை நாடாளுமன்றுக்கு இல்லையெனவும் அது தேர்தல்கள் ஆணையகத்திற்கே உண்டெனவும் சபாநாயகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
