அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படலாம்! உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு
இலங்கையின் எதிர்காலத்தில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படலாம் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டதால் எதிர்வரும் காலங்களில் சந்தையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் நிலவரம்
நாட்டில் பொருளாதார நெருக்கடியால் எரிப்பொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போன்றவற்றுக்கான கேள்வி அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது.
இப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு காரணமாகவும், கடுமைான விலை உயர்வு காரணமாகவும் பொதுமக்கள் பாரிய பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி மற்றும் விலைகுறைப்பு என்பன வரவேற்கதக்கவிடயமாகும்.