சூரிய மின்படலங்களை பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கையில் சூரிய மின்படலங்களை பயன்படுத்துபவர்களுக்கு வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இன்று (27) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) வரை, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட சூரிய மின்படலங்களை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த நாட்களில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை சூரிய மின்படலங்களை செயலிழக்கச் செய்யுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிளிநொச்சியில் காரில் சென்ற குடும்பத்தை மோதிய தொடருந்து - 17 வயது சிறுமி பலி - இரு சிறுவர்கள் படுகாயம்
தேசிய கட்டமைப்பு செயற்படுத்துநர்
இதேவேளை விடுமுறை காலத்தில் மின்சாரத் தேவை குறைவாக இருப்பதால், 300 கிலோவாட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட சூரிய மின்படலங்களை தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்ய தேசிய கட்டமைப்பு செயற்படுத்துநர் நடவடிக்கை எடுத்துள்ளது.

விடுமுறை காலத்தில் மின்சாரத் தேவை குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும், தேசிய மின் அமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டும் இந்தத் தற்காலிக நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11