இலங்கையை போன்ற நிலை பாகிஸ்தானிலும் ஏற்படவேண்டுமென விரும்பும் இம்ரான் கான்
Sri Lanka Economic Crisis
Pakistan
Imran Khan
By Sumithiran
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை போன்று பாகிஸ்தானிலும் ஏற்படவேண்டுமென விரும்புவதாக தற்போதைய அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போது பாகிஸ்தான் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு அரசியல்வாதியாக மாறிய கிரிக்கெட் வீரர் தலைமையிலான முந்தைய அரசாங்கத்தின் முடிவுகளே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழப்பத்திற்கான விலை
கடந்த ஓகஸ்டில், சர்வதேச நாணய நிதியம், அதன் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் மறுமலர்ச்சிக்கு ஒப்புதல் அளித்ததால், பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்கொண்டது.
எனினும், இம்ரான் கான் தலைமையிலான முந்தைய ஆட்சியால் உருவாக்கப்பட்ட குழப்பத்திற்கான விலையை நாடு தொடர்ந்தும் செலுத்துகிறது என்றும் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி