தடுப்புக்காவலில் இருந்தவர் சினிமாப்பாணியில் சுட்டுக்கொலை: கொழும்பில் சம்பவம்! விளக்கமறியலில் 3 காவல்துறையினர்

Sri Lanka Police Supreme Court of Sri Lanka Sri Lanka Police Investigation
By Kiruththikan Jun 22, 2022 04:00 AM GMT
Report

சந்தேக நபரை சுட்டுக் கொன்ற காவல்துறை

தடுப்புக் காவலில் இருந்த சந்தேக நபரை சுட்டுக் கொன்ற வழக்கில் காவல்நிலைய பொறுப்பதிகாரி உட்பட 3 காவல்துறையினரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு - வாழைத் தோட்டம் காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியான மாளிகாவத்தை - புகையிரத ஊழியர்கள் விடுதி தோட்டத்தில், தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை சுட்டுக் கொலைச் செய்தமை தொடர்பில் விலச்சிய காவல் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று காவல்துறை உத்தியோகத்தர்களை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க இதற்கான உத்தரவை நேற்று ( 21) பிறப்பித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணி 

தடுப்புக்காவலில் இருந்தவர் சினிமாப்பாணியில் சுட்டுக்கொலை: கொழும்பில் சம்பவம்! விளக்கமறியலில் 3 காவல்துறையினர் | Incident In Which The Suspect Was Shot

விலச்சிய காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் இலங்கசிங்க, உப்புவேலி காவல் நிலையத்தின் உப காவல்துறை பரிசோதகர் ருச்சிர சந்திம, படல்கம காவல் நிலையத்தின் காவல்துறை சார்ஜன் தயாவங்ஷ ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளவர்களாவர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ், மாளிகாவத்தை ரயில் ஊழியர்கள் விடுதித் தோட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்துன் லசித்த குமார் எனும் நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இது குறித்து வாழைத்தோட்டம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கையை சட்ட மா அதிபருக்கு அனுப்பியிருந்தனர்.

நீதிமன்றில் சரண்

தடுப்புக்காவலில் இருந்தவர் சினிமாப்பாணியில் சுட்டுக்கொலை: கொழும்பில் சம்பவம்! விளக்கமறியலில் 3 காவல்துறையினர் | Incident In Which The Suspect Was Shot

இந் நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் 5 பேரை சந்தேக நபர்களாக பெயரிட சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சுருக்கமுறையற்ற வழக்கு விசாரணை ஒன்றினை முன்னெடுக்குமாறும் வாழைத்தோட்டம் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளதாக வாழைத்தோட்ட காவல்துறையினர் நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தனர்.

அதன்படி மேற்படி மூன்று காவல்துறை உத்தியோகத்தர்களும் நேற்று (21) நீதிமன்றில் சரணடைந்த பின்னர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வாழைத்தோட்டம் காவல் நிலைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி ஆரியரத்ன மற்றும் சார்ஜன் திஸாநாயக்க ஆகியோர் இது குறித்து நீதிமன்றுக்கு அறிக்கையிட்டமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி