சிறுவர்கள் தொடர்பில் வைத்திய நிபுணர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - பெற்றோரே அவதானம்
srilanka
corona infection
children
By Jaso
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் தொகை நாளாந்தம் ஆயிரத்தை கடந்த வண்ணமே உள்ளது.அத்துடன் உயிரிழப்புக்களும் குறைந்தபாடாக இல்லை.
இந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாக, சிறுவர் நோய் தொடர்பான விஷேட வைத்திய நிபுணர், தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாளாந்தம், 5 முதல் 10 க்கு இடைப்பட்ட சிறார்கள், கொரோனா தொற்றுக்குள்ளாவதை அவதானிக்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் 500க்கும் அதிகமான சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 10 சிறுவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்