பொருளாதார நெருக்கடியால் அதிகரிக்கப் போகும் நீர் கட்டணம்!
பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாவிட்டால், நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க (Nishantha Ranatunga) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தெடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த 40 ஆண்டுகளில், நாட்டின் 45 சதவீத மக்களுக்கு நீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 வருடங்களுக்குள் அதனை 80 சதவீதமாக அதிகரிப்பதே தமது இலக்கு என கூறியுள்ளார்.
இந்நிலையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் செலவினம், வருமானத்தை விட அதிகரித்துள்ளமையினால் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் அடுத்தாண்டு வரை நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.