இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள் - ஏற்பட்டுள்ள சிக்கல்
புதிய இணைப்பு
வரலாற்று சிறப்புமிக்க ரங்கிரி தம்புள்ள விகாரையைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், போதுமான கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகள் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தொல்பொருளியல் திணைக்களத்தின் அனுமதி கிடைக்காததால் சுகாதார வசதிகளை விரிவுபடுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஜனவரி 1 முதல் மார்ச் 20 வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 641,961 ஆகும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2025 மார்ச் 1 முதல் 20 வரை மட்டும் 148,983 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 148,983 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
குறித்த விடயம் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (Sri Lanka Tourism Development Authority) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள்
வருடத்தில் 641,961 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் (India) இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
மேலும், ரஷ்யா, ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்த மற்ற நாடுகளாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்