இந்தியாவால் மூக்குடைபட்ட ட்ரம்ப்! ரஷ்யாவின் அறிவிப்பால் பரபரப்பு
எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது தொடர்பில் இந்தியாவிடம் இருந்து எந்தவொரு செய்தியும் வரவில்லை என ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்தவும், வெனிசுவேலா மற்றும் அமெரிக்காவிடம் எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டதாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்தார்.
ட்ரம்ப் வெளியிட்ட குறித்த கருத்தானது, சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகியிருந்தது.
ரஷ்யாவின் பதில்
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் இந்திய அரசிடம் இருந்து எந்தவொரு செய்தியும் வரவில்லை என ரஷ்ய அரசின் செய்தித்தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

Image Credit: NBC News
இதேவேளை, ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து இந்திய சுத்திகரிப்பாளர்களிடம் இருந்தும் எந்தவொரு தகவலும் வரவில்லை என ரஷ்ய எரிசக்தி அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாாவின் எண்ணெய் கொள்முதல்
88 வீத எண்ணெய்யை இந்தியா வெளிநாடுகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றது. உக்ரைன் மீதான போரால், ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்வதை ஐரோப்பிய நாடுகள் ரத்து செய்துள்ளன.

Image Credit: Reuters
அதன்படி, மிகப் பெரிய எரிசக்தி தேவையுடைய இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்வதால், கடந்த 2025 ஆம் ஆண்டு இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 10 மணி நேரம் முன்