அமெரிக்க பேச்சுவார்த்தைக்காக ஈரான் விதிக்கும் கட்டுப்பாடு! வலுக்கும் பதற்றம்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இந்த வாரம் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கியின் இஸ்தான்புலில் நடைபெறவிருந்த இந்த பேச்சுவார்த்தையை, ஓமான் நாட்டில் நடத்த வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ள நிலையில், இந்த சந்தேகங்கள் வலுத்துள்ளன.
அமெரிக்காவின் நோக்கம்
அத்துடன், பேச்சுவார்த்தையின் பொருள் அணு விவகாரங்களுக்கு மட்டும் சுருக்கப்பட வேண்டும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

Image Credit: Council on Foreign Relations
அமெரிக்கா, ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பிராந்தியத்தில் அதன் ஆதரவு குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும் பேச விரும்புகிறது.
ஆனால் ஈரான், அணு விவகாரங்களை தவிர பிற விடயங்கள் பேசப்பட முடியாது என்றும், தனது பாதுகாப்பு திறன்கள் பேச்சுவார்த்தைக்கு உட்படாதவை என்றும் தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் எச்சரிக்கை
இந்த நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது படை திரட்டலை அதிகரித்துள்ளது. அமெரிக்க கடற்படை கப்பல் ‘அபிரகாம் லிங்கன்’ அருகே நெருங்கிய ஈரானிய ட்ரோன் ஒன்றை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.

Image Credit: Fortune
ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் மோசமான நிகழ்வுகள் ஏற்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இருப்பினும், பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 11 மணி நேரம் முன்