பிரித்தானிய ஊடகவியலாளர் இலங்கை செல்வதற்கு தடை விதித்தது இந்தியா
விமான நிலையத்தில் தடுப்பு
பிரித்தானியாவின் கார்டியன் ஊடகவியலாளரான ஆகாஷ் ஹசன் என்பவரே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டவராவார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 196 இல் பயணிக்கவிருந்த நிலையிலேயே அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Immigration officials at IGI airport New Delhi barred me from boarding a flight to Colombo, Sri Lanka. I was headed to report on the current crises in the country.
— Aakash Hassan (@AakashHassan) July 26, 2022
The immigration officials took my passport, boarding pass and have made me sit in a room for last four hours. pic.twitter.com/G36kx3oYQK
காரணம் தெரிவிக்கப்படவில்லை
இது தொடர்பில் ஆகாஷ் ஹசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சுமார் ஐந்து மணி நேரம் ஒரு துளி தண்ணீர் கூட அருந்தாமல், எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் தான் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகவும், தனது போர்டிங் பாஸை மறுத்ததன் பின்னர் விமான டிக்கட் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
After making me wait for five hours, without providing even water to drink. I have been handed over my passport and boarding pass with a red rejection stamp: “Cancelled Without Prejudice” pic.twitter.com/VmSuqSnACI
— Aakash Hassan (@AakashHassan) July 26, 2022
.
மேலும் தான் இலங்கை செல்வதனை தடை செய்தமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் தன்னிடம் கூறவில்லை எனவும் , தனது விஜயத்தின் பின்னணி மற்றும் நோக்கம் குறித்து இரண்டு அதிகாரிகள் தன்னிடம் கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.