காஷ்மீர் தாக்குதலின் எதிரொலி : பாகிஸ்தானுக்கு இந்தியாவின் அதிரடி எச்சரிக்கை
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
தாக்குதல் நடவடிக்கை
இந்த தாக்குதல் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில், அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.
அத்தோடு, பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசாவை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
தயார் நிலை
இதனுடன், இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்கள் அனைவரும் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் எனவும், பாகிஸ்தான் அதிகாரிகள் மே 1 ஆம் திகதிக்குள் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்தியா பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி ஒப்பந்தத்தை தாற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
மேலும், முப்படைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
