இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிறிலங்காவிற்கு விஜயம்!
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸின்(G.L.Peiris) அழைப்பின் பேரில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்(Subrahmanyam Jaishankar) 3 நாள் பயணமாக சிறிலங்கா வரவுள்ளார். ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை கொழும்புவில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 நாள் அரச முறை சுற்றுப் பயணத்தின் போது, சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajabaksha), பிரதமர் மகிந்த ராஜபக்ச(Mahinda Rajabaksha) மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்(G.L.Peiris) ஆகியோரை தனித்தனியாக சந்தித்தப பேச உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவிற்கான இவரது சுற்றுப் பயணம் தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் குறித்தும் அவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்தும், சிறிலங்கா அரசிடம் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - சிறிலங்கா இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில், அவரின் பயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், கடந்த காலங்களில் இரு நாடுகளிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதற்கு சீனா, சிறிலங்காவுடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததும் ஒரு காரணமாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை சீனா, இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்புகிறது என்றும் சிறிலங்காவின் பாதுகாப்பு தொடர்பான அணுகுமுறையில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இதனையடுத்து இலங்கையுடன் உறவை மேம்படுத்தும் வகையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விஜயம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா(Harsh Vardhan Shringla) கடந்த 2 ஆம் திகதி சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டு கட்சி தலைவர்கள் மற்றும் அரச தலைவர்களுடன் கலந்துரையாடி, இன்றும் மீண்டும் நாடு திரும்பவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.