பாகிஸ்தானுக்கு இந்தியா வைத்த அதிரடி செக் !
பாகிஸ்தானின் (Pakistan) பயங்கரவாத நிதியுதவி தொடர்பான ஆதாரங்களுடன் FATF (Financial Action Task Force) அமைப்பிடம் அறிக்கை ஒன்றை இந்தியா சமர்பிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள முக்கியக் கூட்டத்தில் பாகிஸ்தானை மீண்டும் “கிரே லிஸ்ட்” பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க இந்தியா (India) திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, உலக வங்கியிடமும் (World Bank) அடுத்த மாதம் மனுவைத் தாக்கல் செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள்
இதன்படி, பாகிஸ்தானுக்கு எதிர்கால நிதியுதவிகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா முன்வைக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பாகிஸ்தானின் போதைப்பொருள் வணிகத்தில் ஈடுபாடு மற்றும் ஜிஹாத் அமைப்புகளுக்கு நிதியுதவி ஆகியவை தொடர்பாக இந்தியா கூர்ந்த ஆதாரங்களைத் திரட்டியுள்ளது.
பாகிஸ்தானின் நிலையான நடவடிக்கை இல்லாததை இந்தியா வலியுறுத்துகின்ற நிலையில், 2018 இல் FATF கிரே லிஸ்டில் இடம் பெற்ற பாகிஸ்தான் 2022 இல் வெளியேற்றப்பட்டது.
பயங்கரவாத அமைப்பு
ஆனால், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் UN-அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தொடர்கிறது என்று இந்தியா குற்றம்சாட்டுகிறது.
ஏப்ரல் 22 ஆம் திகதி ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததுடன் அதற்கு TRF (Lashkar-e-Taiba கிளை) பொறுப்பேற்றது.
இந்தநிலையில், IMF பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டொலர் கடனை விடுத்து இந்தியாவின் எதிர்ப்பை சந்தித்தது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் இந்த நிதியுதவி, பயங்கரவாதத்திற்கான மறைமுக ஆதரவாகும்” என கடுமையாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
