வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான தீர்மானம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னாயத்தக் கூட்டம் இடம்பெற்றது.
கச்சதீவு தேவாலய திருவிழா இன்னும் ஒரு மாதத்தில் இடம்பெறவுள்ளதால் அதற்கான முன்னாயதம் தொடர்பான கூட்டமே இன்று காலை இடம்பெற்றது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 3, 4ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தலைமையில் மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தீர்மானம்
இதன் பிரகாரம் எதிர்வரும் கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் 4500 இலங்கை பக்தர்களையும், 3500 இந்திய பக்தர்களையும், மதகுருமார்கள் உள்ளடங்கலாக 1000 சிறப்பு அதிதிகளையும்அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் படையினர் பங்குபற்றல்
இக் கூட்டத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகள், கடற்படையினர், இராணுவத்தினர், காவல்துறையினர், ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


