திருகோணமலையில் வலுப்படுத்தப்பட்டுள்ள இந்திய நிலைகள்
திருகோணமலையில் இந்தியாவை முதலீடுகளை விரிவுபடுத்த தற்போதைய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
திருகோணமலை எண்ணெய் தாங்கிப் பண்ணைத் திட்டம் மற்றும் அண்மைய திட்டங்களுக்கு என்.பி.பி அரசாங்கம் எவ்வாறு உதவியது என கேள்வி எழுகிறது.
திருகோணமலை சீனக்குடா
திருகோணமலை சீனக்குடாவில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வருகை தந்த போதும், முன்னிலை சோசலிசக் கட்சி அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்திய திட்டங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தும் கடிதத்தை அநுரகுமார திசாநாயக்கவிடம் ஒப்படைக்க முயன்ற போது, காவல்துறையினர் அதனைத் தடுத்திருந்தனர்.
பல ஆண்டுகளாக ஜே.வி.பி மற்றும் என்.பி.பி கூறி வருவதற்கு மாறாக, இலங்கைக்கு விரோதமான ஒரு நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் பின்பற்றுகிறது .
நிலத்தை கையகப்படுத்துவதன் மூலம், திருகோணமலையில் இந்தியா தனது நிலையை உறுதிப்படுத்த அரசாங்கம் அனுமதித்ததாகவும், மக்களுக்கு எதுவும் மிச்சமில்லை.
அதேவேளை, சர்ச்சைக்குரிய காற்றாலை மின் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்களைத் தொடங்கிய மன்னார் மாவட்டத்தில் அரசாங்கம், இதேபோன்ற ஒரு உத்தியைக் கடைப்பிடித்துள்ளது” என அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
