யாழின் முக்கிய மனித கடத்தல்காரர்! குருநகர் படகுத்துறையை அடையாளப்படுத்திய இஷாரா

Jaffna India Ishara sewwandi Ganemulle sanjeewa
By Dharu Oct 21, 2025 07:51 AM GMT
Report

போதைப்பொருள் கடத்தல்காரரான கணேமுல்ல சஞ்சீவாவை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டில் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியிடம் இருந்து பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

கொலைக்கு பின்னர் அவரை இந்தியாவிற்கு அனுப்பிவைக்க திட்டமிட்ட கும்பல்களை தேடி காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் அவரை இந்தியாவிற்கு கடத்துவற்கு உதவியதாகக் கூறப்படும் வடக்கைச் சேர்ந்த ஒரு மனித கடத்தல்காரர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இஷாராவின் வாழ்க்கையை மாற்றிய தருணம்...! வெளிநாட்டு மோகமா: மாமா வாக்குமுலம்

இஷாராவின் வாழ்க்கையை மாற்றிய தருணம்...! வெளிநாட்டு மோகமா: மாமா வாக்குமுலம்

குருநகர் படகுத்துறை

குறித்த சந்தேகநபர் முன்னர் பல்வேறு குற்றவாளிகள் மற்றும் பிறரை சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழின் முக்கிய மனித கடத்தல்காரர்! குருநகர் படகுத்துறையை அடையாளப்படுத்திய இஷாரா | Isara Sent To India On A Small Boat In Jaffna

இந்த மனித கடத்தல்காரருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் கெஹல்பத்தர பத்மேவால் வழங்கப்பட்டது என்பது காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்படி, மே 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள குருநகர் படகுத்துறையில் இருந்து இஷாரா ஒரு சிறிய படகில், மேலும் மூன்று பேரின் பாதுகாப்பில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டதாக அறியப்படுகிறது.

இஷாராவை இந்தியாவில் இறக்கிவிடப்பட்ட பிறகு, மூவரும் அதே படகில் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மூவரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் இஷாராவை அனுப்பும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய முக்கிய மனித கடத்தல்காரர் கைது செய்யப்பட்ட பின்னரே அவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று காவல்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு மூன்று பேருடன் ஒரு சிறிய படகில் கடல் கடந்து சென்றது மிகவும் பயங்கரமான அனுபவம் என்று இஷாரா கூறியதாக கூறப்படுகிறது.

செவ்வந்தியுடன் தொடர்புடைய அனைவருக்கும் இது நடக்கும்...! எச்சரிக்கும் நீதி அமைச்சர்

செவ்வந்தியுடன் தொடர்புடைய அனைவருக்கும் இது நடக்கும்...! எச்சரிக்கும் நீதி அமைச்சர்

பயத்தில் அழுத இஷாரா

படகு கவிழ்ந்து கடலில் மூழ்கிவிடுமோ என்ற பயத்தில் தான் அழுததாகவும் அவர் காவல்துறையிடம் மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் இஷாராவை கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் சென்று, இந்தியாவிற்கு தப்பிச் செல்வதற்கு முன்பு அவர் மறைந்திருந்த இரண்டு வீடுகளையும் சோதனை செய்துள்ளனர்.

யாழின் முக்கிய மனித கடத்தல்காரர்! குருநகர் படகுத்துறையை அடையாளப்படுத்திய இஷாரா | Isara Sent To India On A Small Boat In Jaffna

இஷாரா தங்க வைக்கப்பட்டிருந்த வீடுகளில் ஒன்றைச் சேர்ந்த ஒருவர் கொழும்பிலிருந்து சென்ற காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நேரத்தில் மற்ற வீடு மூடப்பட்டிருந்ததாகவும், அங்கு யாரும் இல்லை என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அந்த வீட்டில் வசிப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இஷாரா நேற்று குருநகர் படகுத்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

காவல்துறை சிறப்புப் படையினரால் அவர் வடக்குப் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இஷாரா நேற்று இரவு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளார்.  

செவ்வந்தியுடனான நாமலின் உறவு சிஐடிக்கு சென்றது மொட்டு

செவ்வந்தியுடனான நாமலின் உறவு சிஐடிக்கு சென்றது மொட்டு



you may like this


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015