இந்திய தலைநகரில் தொடரும் பதற்றம்: விவசாயிகள் மீது தாக்குதல் நடாத்தும் காவல்துறையினர்

Advanced Agri Farmers Mission Delhi SL Protest India
By Shadhu Shanker Feb 13, 2024 07:20 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இந்தியா
Report

புதிய இணைப்பு

புது டெல்லியை நோக்கி "டெல்லி சலோ" (Delhi Chalo) எனும் முழக்கத்துடன்  பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வந்த விவசாயிகளின் பேரணி நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி சென்றனர்.

இந்நிலையில் டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகளின் போராட்டத்தை கலைக்கும் வகையில் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.

இதனால் பல போராட்டக்காரர்கள் அங்குமிங்கும் ஓடினர். ஆனால், இதனை பொருட்படுத்தாமல் பேரணியாக உள்ளே நுழைய விவசாயிகள் முயன்று வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளால் டெல்லியை சுற்றி தற்போதைய நிலைமை பதற்றமாக இருந்து வருகிறது.

முதலாம் இணைப்பு

விவசாயிகள் நடைபயணமாகவும் கனரக வாகனங்களிலும் டெல்லி நோக்கிய தங்கள் போராட்ட பேரணியை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய அமைச்சர்களுடன் நேற்றைய தினம்(12)  ஐந்து மணி நேரம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாததையடுத்து விவசாயிகள் இந்த போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமை பெறுவதில் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா!

அமெரிக்க குடியுரிமை பெறுவதில் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா!

பாரிய போராட்ட பேரணி

வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

delhi protest today

டெல்லி நோக்கி பேரணி என்ற பெயரில் ஆரம்பமாகியுள்ள இந்த போராட்டத்தில் சுமார் 200 விவசாய அமைப்புகளை சேர்ந்த 15 முதல் 20 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன், 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கனரக வாகனங்களில் டெல்லி-நொய்டா எல்லையில் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விவசாயிகளின் போராட்டம்

உத்தர பிரதேசம், சண்டிகர் மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

delhi farmers protest

இந்த நிலையில், டெல்லி நோக்கிய விவசாயிகளின் போராட்டம் காரணமாக எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை டெல்லி எல்லையில் பேரணி, பொதுக் கூட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டெல்லி எல்லைக்குள் போராட்டம், பேரணி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கனரக வாகனங்கள் நுழைவதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தீவிர சோதனை

அத்துடன், மூன்று மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் எல்லைகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

delhi protest

மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு விவசாயிகளால் நடத்தப்பட்ட போராட்ட சூழல் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு மற்றுமொரு மகிழ்ச்சித் தகவல்! இலவச இழப்பீடு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு

விவசாயிகளுக்கு மற்றுமொரு மகிழ்ச்சித் தகவல்! இலவச இழப்பீடு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025