இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மீண்டும் யாழில் போராட்டம்

Indian fishermen Sri Lanka Fisherman
By Shalini Balachandran Mar 02, 2024 12:26 PM GMT
Report

இந்திய இழுவை படகினுடைய அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக யாழிலுள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டுமெனவும் வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்றையதினம்(02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 23 ஆம் திகதி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொதுச் சபை கூட்டமானது முல்லைதீவிலே நடைபெற்றதையடுத்து எதிர்வரும் ஐந்தாம் திகதி நாங்கள் வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகை இடுவதற்கான போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

புத்தாண்டுக்கு முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் : பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு

புத்தாண்டுக்கு முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் : பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு

கடற்றொழிலாளர்கள் 

இந்தியாவிலிருந்து வருகின்ற படகுகளை தடுத்து நிறுத்துவதற்கு எமது அரசாங்கத்தால் முடியாது அத்தோடு இந்திய அரசாங்கம் நடித்துக் கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கின்றமை எங்களுக்கு தெரிந்த விடயம்.

வடபுலத்திலே வாழுகின்ற கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகவே துன்பத்தையே தமது வாழ்க்கையாக வாழ்ந்து, பல சவால்கள் மத்தியிலே உயிர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மீண்டும் யாழில் போராட்டம் | Indian And Srilankan Fisher Mens Issues

இந்த நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டமைக்கு முக்கியமான காரணம் போராக இருந்தாலும் அடுத்ததாக இங்கே பூதாகரமாக புரையோடிக் கிடக்கின்ற இந்த இந்திய இழுவை படகினுடைய அத்துமீறிய வருகையும் அவர்களுடைய அடாவடித்தனமான சட்ட விரோதமான தொழில்முறையுமே காரணமாக இருக்கின்றது.

இதன் மூலமாக அவர்கள் எங்களுடைய கடல் வளங்களை அழித்துச் செல்வதனுடன் வாழ்வாதாரத்தை சூறையாடியும் கடற்தொழில் உபகரணங்களை அடுத்து நாசமாக்கிவிட்டும் செல்கின்றார்கள்.

மும்பை தாக்குதலுக்கு பழிவாங்கும் படலம்! அவிழ்க்கமுடியா மர்மத்தை நிகழ்த்துகிறதா இந்தியா

மும்பை தாக்குதலுக்கு பழிவாங்கும் படலம்! அவிழ்க்கமுடியா மர்மத்தை நிகழ்த்துகிறதா இந்தியா

வாழ்வாதாரம்

அன்று நடந்த பேச்சுவார்த்தையில் “நீங்கள் உங்களது எல்லைக்குள் மீன் பிடிக்காமல் ஏன் எங்களது எல்லைக்குள் வருகின்றீர்கள்" என கேட்டபோது எங்களது எல்லையில் மீன்கள் இல்லையெனவும் வளங்கள் அழிந்துவிட்டன எனவும் அதனால்தான் இங்கே வருகின்றோம் என சொல்கின்றார்கள்.

இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மீண்டும் யாழில் போராட்டம் | Indian And Srilankan Fisher Mens Issues

ஆனால் அன்னியச் செலாவணியை ஈட்டுவதற்காக சென்னை பட்டினத்தில் இருந்து வெளிநாட்டுக்கு மீன்களை அனுப்புகின்றார்கள், அது எங்கே பிடிக்கப்பட்ட மீன் ? எங்களுடைய வளங்களை அள்ளிக் கொண்டு சென்று நீங்கள் வெளிநாடுகளுக்கு விற்றுவிட்டு அங்கிருந்து வருகின்ற அந்நியச் செலாவணியை எடுத்து உங்களுக்கு மட்டுமல்ல நாடு முழுவதற்கும் கொடுத்துவிட்டு இப்பொழுது நாங்கள் எங்களுடைய வலைகள் அறுந்துவிட்டது என்று ஆதங்கப்பட்டு இப்படி செய்தவர்களது படகுகளை எரித்து அடித்து துரத்த வேண்டும் என்ற ஆதங்கத்தில் பேசினால் நீங்கள் கோபப்படுகிறீர்கள்.

அறுக்கப்பட்டவர்கள் அழுகின்றோம் காரணம் இருக்கிறது ஆனால் அறுத்துவிட்டு போன நீங்கள் கோபப்படுவதற்கு என்ன நியாயம் இருக்கின்றது ? ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் உங்களது படகுகள் வந்து எங்களது வளங்களை அள்ளிச் செல்வதோடு சாதாரணமாக ஒரு பத்தாயிரம் அல்லது முப்பதாயிரம் இந்திய ரூபாய்க்கு ஒரு படகில் வந்து மீனை பிடித்தால் இந்த முப்பதாயிரம் ரூபா இலங்கை காசுக்கு ஏறக்குறைய ஒன்றேகால் இலட்சத்துக்கு மேலே வரும்.

வெளிநாடொன்றின் நாடாளுமன்றில் மின் துண்டிப்பு : மின்தூக்கியில் சிக்கிய எம்.பிக்கள்

வெளிநாடொன்றின் நாடாளுமன்றில் மின் துண்டிப்பு : மின்தூக்கியில் சிக்கிய எம்.பிக்கள்

போராட்டம்

அந்தவகையில் ஒரு படகு ஒரு வருடத்திற்கு 60 கோடிக்கு அதிகமான மீனை பிடித்துக் கொண்டு போகின்றதானால் இதை உங்களது 2500 படகினால் பெருக்கிப் பாத்தால் எத்தனை ஆயிரம் கோடியை நீங்கள் கொண்டு போகிறீர்கள் என்று.

இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மீண்டும் யாழில் போராட்டம் | Indian And Srilankan Fisher Mens Issues

ஏறக்குறைய 1987 ஆம் ஆண்டு இந்திய மற்றும் இலங்கை ஒப்பந்தத்திற்கு பிறகு 40 வருட காலமாக எங்களது கடலை வாரி செல்கின்றீர்கள் அத்தோடு எத்தனை ஆயிரம் கோடிகளை கொண்டு போய் விட்டீர்கள் இருப்பினும் எமது அகதிகளுக்கு வரிப்பணத்தில் கொடுப்பதாக கொக்கரிக்கின்றீர்கள் ஆனால் எங்களது கடலை எங்களிடம் விடுங்கள் நாங்கள் எங்களுக்கு கிடைக்கின்ற வருவாயில் அகதிகளுக்கு காசு அனுப்புகின்றோம்.

கடற்றொழிலாளர்களால் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டத்தை ஆக்கபூர்வமான ஒரு உணர்ச்சி பூர்வமான போராட்டமாக மாற்ற வேண்டுமாக இருந்தால் இலங்கையிலுள்ள பல அமைப்புகள் அனைத்து கடல் தொழிலாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் அதிலே முழுமையாக பங்குபற்றி வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.   

நாடாளுமன்றிற்கு வரமாட்டேன்! கெஹலிய திட்டவட்டம்

நாடாளுமன்றிற்கு வரமாட்டேன்! கெஹலிய திட்டவட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024